வேதாரண்யம், ஜன.24: வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறில் இந்தஆண்டு மானாவாரி மற்றும் ஆற்றுப்பாசன பகுதிகளில் சுமார் 24 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி நடைபெற் உள்ளது. பருவமழை நன்றாக பெய்து தற்போது நெல் அறுவடை பணி தொடங்கும் நிலையில் உள்ளது. பல இடங்களில் நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் தோகை புழுக்கள் தாக்கல் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் பெய்த திடீர் மழையால் சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பிற்குள்ளாகியது. இதனால் விவசாயிகள் சாய்ந்த கதிர்களை முதலில் அறுவடை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.