திருப்புத்தூர் திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா

திருப்புத்தூர், ஜன, 23: திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தன. பின்னர் திருத்தளிநாதரும் சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்புறத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: