ராசிபுரம், ஜன.23: ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பேரூராட்சியில், பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார். அவர் கூறுகையில், ‘பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று மனுக்களை பெற்று வருகிறோம். தமிழகத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால், ₹50 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள 24 ஆயிரம் பயனாளிகளுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று முதிர்வு தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.