சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழுவினர் நாமக்கல்லில் இன்று ஆய்வு

நாமக்கல், ஜன.23: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின்  பொது கணக்கு குழுவின் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் தலைமையிலான குழுவினர், நேற்று இரவு நாமக்கல் வருகை புரிந்தனர். இவர்களுடன் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் பத்மகுமார், துணை செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி ஆகியோரும் வந்துள்ளனர். இந்த குழுவினர் இன்று (23ம்தேதி) மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிடுகிறார்கள். பின்னர்  காலை 11 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆய்வு செய்கிறார்கள். இதில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், பாஸ்கர், ராஜேந்திரன், உதயசூரியன், கணேஷ், கீதா, சந்திரசேகர், நடராஜ், பரமசிவம், பழனிவேல் தியாகராஜன், பாரதி, மருதமுத்து, முகம்மது அபுபக்கர், மோகன், ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: