பூனை குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

தேனி, ஜன. 22: தேனி அருகே பூனை குறுக்கே பாயந்ததால் அதன் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பலியானார். தேனி அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் உதுமான்அலி (30). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று காலை ஆட்டோவில் கருவேப்பிலை ஏற்றிக் கொண்டு தேனிக்கு வந்தார். உப்பார்பட்டி பிரிவு அருகே ஆட்டோ வரும் போது குறுக்கே சென்ற பூனை மீது மோதியது. இச்சம்பவத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.  இதில் பலத்த காயமடைந்த உதுமான்அலி சிகிச்சை பலனின்றி இறந்தார். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: