இளையான்குடி, ஜன. 22: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இளையான்குடியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.