கல்லூரி நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை

மதுரை, ஜன.22: மதுரை கோச்சடை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சீனிவாசன் (73). தனியார் நிறுவனம் நடத்தும் சமுதாயக்கல்லூரியில் உதவி இயக்குனராக உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் இளைய மகன் வீட்டுக்கு பொங்கல் கொண்டாட கடந்த 14ம் தேதி குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் இரவு மதுரை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க உதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 கிராம் தங்க கட்டி, 2 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை ேதடி வருகின்றனர்.

Related Stories: