ஒரு மணி நேரம் போராடி மீட்பு கட்டுமாவடியில் சைக்கிள் தின பேரணி

மணமேல்குடி, ஜன.22: கட்டுமாவடியில் நடைபெற்ற சைக்கிள் தின பேரணியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிட் இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரும் சைக்கிள்களை ஓட்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஜனவரி 18ம் தேதியை இந்திய சைக்கிள் தினமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய சைக்கிள் தினத்தை முன்னிட்டு கட்டுமாவடியில் சைக்கிள் தின விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.கட்டுமாவடி ஊராட்சி தலைவர் லோகம்பாள் சிதம்பரம் தலைமையிலும், ஊராட்சி துணை தலைவர் உதயகுமாரி ராமர் முன்னிலையிலும் இந்த பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: