நாகர்கோவில், ஜன.22: அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை மாணவ மாணவியர் வாசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 மணியளவில் பள்ளி மாணவ-மாணவர்களைக் கொண்டு எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தர
விடப்பட்டுள்ளது.