மதுரை, ஜன. 21:நெல் கொள்முதல் மையங்கள் திறக்கக்கோரிய வழக்கில் ராமநாதபுரம் கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முதுகுளத்தூர் தாலுகாவில் 10 ஆண்டுக்கும் மேலாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், பலரும் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், பலரும் நெல் பயிரிட்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. அரசின் சார்பில் போதுமான அளவுக்கு நெல் கொள்முதல் மையங்கள் இல்லாததால், பலரும் பாதித்துள்ளனர்.