திருச்சுழி, ஜன. 21: திருச்சுழி பகுதியில் செல்லும் வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாததால், அதிக ஒளியால் எதிர் வரும் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி பகுதியில் சமீபகாலமாக பஸ், லாரி, கார், பைக்குகளில் அதிக திறன் கொண்ட முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளில் கருப்புநிற ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது இல்லை. வாகனங்களின் முகப்பு விளக்கு அதிக பிரகாசத்தில் எரியவிடுவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலை குலைகின்றனர்.