காரைக்கால், ஜன.21: காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியில் தனியார் உயர்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை நேர வகுப்புகள் முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் மணி அடிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் துள்ளிக்குதித்து வீடு திரும்பினர். அப்போது, எங்கிருந்தோ பறந்துவந்த கதண்டு வண்டுகள் கூட்டம், மாணவர்களை கடித்ததாக கூறப்படுகிறது.