விருத்தாசலம், ஜன. 21:கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், கோயில் திருவிழா, பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கிராமத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளை தடுப்பதற்காக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும், அவருடைய கருத்துக்கு ஒத்துப்போகாத குடும்பங்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களை நடத்தி வருபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.