தென்தாமரைகுளம், ஜன.21: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய 3 மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. தேரோடும் ரதவீதி குண்டும், குழியுமாக உள்ளதால் தேரோட்டம் நடக்கும் நேரங்களில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் சிரமமடைந்தனர். எனவே நான்கு ரதவீதியையும் மணல் நிரப்பி சீரமைக்க அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை முடிவு செய்தது.