தென்தாமரைகுளம், ஜன. 21: சாமிதோப்பு அருகே சாஸ்தான்கோவில் விளையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(55). இவரது மகன் தினேஷ்பாபு(27). இன்ஜினியரிங் பட்டதாரி. திருமணமாகவில்லை. இவர் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள உரத் தொழிற்சாலையினில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ்பாபு பணியில் இருக்கும் போது பாய்லர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாய்லரில் இருந்த கொதிக்கும் தண்ணீர் திடீரென்று தினேஷ்பாபுவின் மீது கொட்டியது. இதில் வலிதாங்க முடியாமல் துடிதுடித்த தினேஷ்பாபுவை சக தொழிலார்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தினேஷ்பாபு சிகிச்சை பெற்று வந்தார்.