குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

ராஜபாளையம், ஜன. 20: ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் உள்ள தனியார் வளாகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கிளை தலைவர் ஹஜ்அலி தலைமை வகித்தார்.கண்காட்சியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்கள் குறித்த விரிவாக்கம், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து அரசியல் தலைவர்களின் கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், இதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டக் களங்கள், இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்த மாநில முதல்வர்கள், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, போதுமான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அகதிகளாக அறிவிக்கப்படுபவர்களிடம் இருந்து பறிக்கப்படும் உரிமைகள் ஆகியவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Related Stories: