விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

விருதுநகர், மே 18: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. விருதுநகர் விளையாட்டு அரங்கில் கோடை கால பயிற்சி முகாம் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு 15 நாட்கள் தினசரி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடத்தப்பட்டது.

முகாமில், வளைகோல்பந்து, டென்னிஸ், தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது தினசரி முட்டை, பிஸ்கட் வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு நாள் விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மணிமாறன் தலைமையில் பயிற்சி முகாமில் பங்கேற்ற 76 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 98 பேருக்கு பங்கேற்பு சான்றிதழ் மற்றும் டீசர்ட் வழங்கப்பட்டன.

The post விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: