நிலுவை தொகை வழங்க கோரிக்கை

 

விருதுநகர், மே 17: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் சர்க்கரை துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதம் வருமாறு: வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திவால் நடவடிக்கையை விலக்கி கொண்டுள்ளது.

தரணி சர்க்கரை ஆலைக்கு 2018-19ம் ஆண்டு காலத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கவில்லை. ஆலையை திறப்பதற்கு முன்பாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடம் இருந்து கரும்பு விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கையாக நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நிலுவை தொகை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: