திருமலை, ஜன.20: சித்தூரில் நடந்த தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என நடிகை ரோஜா கூறினார். நாடு முழுவதும் 31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகையும், ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி குழு தலைவருமான ரோஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பைக் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து மொபட்டில் ஊர்வலமாக சென்றார்.