மன்னார்குடி, ஜன.20: திருவாரூர் மாவட்டத்தில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று நடைபெற்ற முகாம்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் துவக்க விழா மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்பாள் முன்னிலை வகித்தார். இதில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி:, போலியோ இல்லாத தமிழக த்தை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடு பட்டுள்ளது.அரசின் தீவிர நடவடிக்கையால் 16 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுகிறது.