சோழவந்தான், ஜன.20: சோழவந்தானில் 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் தன் வீட்டில் வளர்த்த கோழியை முட்டைகளுடன் அடை கூட்டி வைத்தார். இவை இருபத்தி இரண்டு நாட்கள் கழித்து எட்டு குஞ்சுகள் பொறித்தது. இதில் ஒரு குஞ்சு மட்டும் வித்தியாசமாக நான்கு கால்களுடன் இருந்தது. முன் பகுதியில் வழக்கம் போல் ஐந்து விரல்களுடன் கூடிய இரண்டு கால்களும், பின்புறம் ஒரே விரலுடன் கூடிய வால் போல், உயரம் குறைவான இரண்டு கால்களும் இருந்தன. இதைப் பார்த்த ராமகிருஷ்ணன் குடும்பத்தார் இக்குஞ்சு உயிர் பிழைக்குமா என்றும், மற்ற குஞ்சுகளைப் போல் நடக்குமா என்றும் சந்தேகக்பட்டனர்.