சேத்தியாத்தோப்பு, ஜன. 20:சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது எறும்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன், ஊராடசி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஊராட்சியின் சிறப்பு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டப்பட்டு சில நாட்கள் வரை நன்றாக இயங்கி வந்த நிலையில், தற்போது பாழடைந்து காணப்படுகிறது.மேலும் கட்டிடத்தின் பல இடங்களிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறான சூழலில் இன்றைய நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம், கால்நடைகள் கட்ட பயன்பட்டு வருகிறது.