ஆரல்வாய்மொழியில் மாணவிக்கு தொல்லை பெற்றோருக்கு மிரட்டல் வாலிபர் கைது

ஆரல்வாய்மொழி, ஜன. 19: ஆரல்வாய்மொழி  குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் மகன் ரெத்தின சிவா(26). தொழிலாளி. இவர்  வடக்கன்குளத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி  வந்துள்ளார். தெரிந்தவர் என்பதால் அந்த மாணவியிடம் இருந்து ஒரு தங்க  மோதிரத்தை வாங்கி உள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் ரெத்தின சிவாவை கண்டித்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை பெற்ேறார் பள்ளி விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தனர். இதனால்  ரெத்தின சிவாவால் மாணவியை  சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில் பல நாட்களாக தேடி அந்த மாணவியை ரெத்தின சிவா  கண்டுபிடித்தார்.தொடர்ந்து அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்த  செயினை கேட்டுள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தன்னை  தொந்தரவு செய்வதாகவும், செயினை கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார்.  இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதை அறிந்த  ரெத்தின சிவா நேற்று முன்தினம் அந்த மாணவியின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று  மாணவியின் பெற்ேறாரை மிரட்டியுள்ளார். அவரது தொல்லை அதிகமானதால் மாணவியின்  பெற்றோர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ரெத்தினசிவா  மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: