சத்தியமங்கலம், ஜன.19: சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளியில் காந்தி கல்வி நிறுவனம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. மாணவ, மாணவிகள் தோரணம் அமைத்து கரும்பு மஞ்சள் படைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கியபோது ‘பொங்கலோ பொங்கல்’ என குரல் எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மாணவிகள் மாக்கோலம் போட்டு அசத்தினர். விழாவில் காந்தி கல்வி நிறுவன தலைவர் தமிழரசன், துணைத்தலைவர் அப்துல்ரகுமான், செயலாளர் சிராஜ்தீன், பொருளாளர் கோவிந்தராஜன், இயக்குனர்கள் அகமது இப்ராகிம், சுலைமான், சுப்பிரமணியன், கார்த்தி அரசு, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரகதீஸ்வரன், காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தீனதயாளன், காந்தி கல்வியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு தர்மாம்பாள், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவினாசிலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.