பவானி, ஜன.19: பவானியில் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சார்பில் ஜீவாவின் 57ம் ஆண்டு நினைவு நாள் கொடியேற்று விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், குமார், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் சித்தையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.