திருவாரூர், ஜன. 19: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 17ந்தேதி முதல் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மற்றும் மிதமான மழையாக பெய்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த மழை பெய்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த மழை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று காலையில் துவங்கிய மழையானது மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் தெற்கு வீதி, மேலவீதி,பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் மூன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிகள் நடைபெற்று தற்போது ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. மழை காரணமாக நேற்று அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.