ராஜபாளையம், ஜன. 19: மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் நோக்கில், சைக்கிளை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நடைப்பயிற்சி குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜூக்கள் கல்லூரியில் நடந்த சைக்கிள் பேரணி தொடக்க விழாவில், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். தென்காசி தொகுதி திமுக எம்பி தனுஷ் எம்.குமார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.