வத்திராயிருப்பு, ஜன. 19: வத்திராயிருப்பு அருகே, குடியிருப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, முஸ்லீம்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டி பகுதியில் உள்ள தைக்காத் தெரு, காயிதே மில்லத் தெரு, ரகுமத் நகர், அன்சாரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பத்தினர் உள்ளனர்.இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இச்சட்டத்தினால் முஸ்லீம்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், கூமாப்பட்டி ஜமாத் சார்பில் இறைவனிடம் வேண்டி நேற்று ஒருநாள் சிறப்பு நோன்பை கடைப்பிடித்தனர்.