விஏஓ வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலக ஊழியரிடம் விசாரணை

விருதுநகர், ஜன. 14: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள நல்லாங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜா (27). பொறியியல் பட்டதாரி. இவர், வேலை தேடி வந்த நிலையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சர்வே துறையில் பணிபுரியும் நல்லாங்குளத்தை சேர்ந்த சிவா மற்றும் முத்துமணிகண்டன் ஆகியோர் அழகுராஜாவை அணுகி, விஏஓ வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிவா தனக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைவரையும் தெரியும் எனவும், விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

சிவா கூறிய ஆசை வார்த்தை நம்பிய அழகுராஜா, முத்துமணிகண்டனிடம் ரூ.5.50 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது; பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து அழகுராஜா விருதுநகரில் எஸ்பி பெருமாளிடம் நேற்று புகார் மனு அளித்தார். இது தொடர்பான உத்தரவின் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: