விருதுநகர், ஜன. 14: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள நல்லாங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜா (27). பொறியியல் பட்டதாரி. இவர், வேலை தேடி வந்த நிலையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சர்வே துறையில் பணிபுரியும் நல்லாங்குளத்தை சேர்ந்த சிவா மற்றும் முத்துமணிகண்டன் ஆகியோர் அழகுராஜாவை அணுகி, விஏஓ வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிவா தனக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைவரையும் தெரியும் எனவும், விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.