பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

தேனி, ஜன.14:  தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பள்ளி இணை செயலாளர்கள் தவமணி, பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாரம்பரிய உணவு வகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு அதன் சிறப்புகள் விளக்கப்பட்டன. தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உமாபரமேஸ்வரி, பச்சையப்பராஜா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசன் வரவேற்றார்.

விழாவில் பள்ளி மாணவியர் சர்க்கரை பொங்கல் படைத்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் முருகன், மாரிமுத்து ஆகியோர் செய்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: