திருவனந்தபுரம்: தவுபீக் மற்றும் அப்துல் சமீமிற்கு நெய்யாற்றின்கரையில் வாடகை வீடு எடுத்து ெகாடுத்த சையது அலி விதுராவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் கம்ப்யூட்டர் நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். பெயருக்கு தான் அந்த நிறுவனத்தை அவர் நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு அதே வணிக வளாத்தை சேர்ந்த ஒரு வியாபாரி தான் கடை எடுத்து கொடுத்துள்ளார். மனைவி வீடு அருகில் தான் உள்ளது. இருப்பினும் இவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். செல்போன் இருந்தாலும் அதை வெளியே கொண்டு செல்வதில்லை. இரவு வீடு திரும்பிய பின்னர் மட்டும் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அடிக்கடி களியக்காவிளை சென்று வந்துள்ளார். தான் செல்லும் இடம் குறித்து மனைவியிடம் கூட கூறமாட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் 1000 மாத வாடகைக்கு இவர் விதுராவில் வீடு எடுத்தார். டெப்பாசிட்டாக 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அருகே வசிப்பவர்களிடம் எந்த தொடர்பும் வைப்பதில்லை. இவரது வாடகை வீட்டை ஒட்டி தான் வீட்டு உரிமையாளரும் வசித்து வந்துள்ளார். அவரிடமும் இவர் அதிகமாக பேசுவது கிடையாது. எஸ்ஐ கொல்லப்பட்ட அன்று இரவு இவர் வீட்டில் இருந்துள்ளார். அன்று அதிகாலை 2 மணிவரை இவர் லேப்டாப் பயன்படுத்தியுள்ளார்.