தென்தாமரைகுளம், ஜன. 14: சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ெதாடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது. 2ம் நாள் இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6ம் நாள் கற்பக வாகன பவனி, 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.