அண்ணாமலையார் கோயிலில் நடிகர் வெங்கடேஷ் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடிகர் வெங்கடேஷ் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பிரபல நடிகர் வெங்கடேஷ் நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார். இங்கு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், நெய்தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: