சார்பில் விழிப்புணர்வு பேரணிராசிபுரம், ஜன.13: பாவை மருந்தாக்கியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் தேசிய மருந்தாக்கியல் வார விழாவை முன்னிட்டு ‘மருந்தாளுநர்கள் உங்கள் மருந்து ஆலோசகர்கள்” என்ற தலைப்பில் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை தாங்கினார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். பேரணியை பாவை கல்வி நிறுவனங்களின் பொருளாளர் மருத்துவர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.