லால்குடி, ஜன.12: லால்குடி பேருராட்சி பகுதியில் பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள், குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை திருச்சி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார் பார்வையிட்டார் மேலும் பேருராட்சிக்கு வழங்கப்பட்ட பேட்டரி வண்டிளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரக்கன்று நட்டு, பேருராட்சி பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கினார். லால்குடி செயல் அலுவலர் நளாயினி, பூவாளுர் செயல் அலுவலர் ஜவகர், புள்ளம்பாடி செயல் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.