தா.பேட்டை, ஜன.12: தா.பேட்டை அருகே மாவலிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 25 ஊராட்சிகளில் நேற்று ஊராட்சி துணை தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மாவிலிபட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் ஊராட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் போட்டியிடுவதாக கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுவாமிநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கு சென்று உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித முடிவும் எட்டவில்லை. இதையடுத்து ஊராட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை பதிவு செய்த அலுவலர்கள் மாவலிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் மாவலிப்பட்டி ஊராட்சியை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றுள்ளது.