அரியலூர், ஜன.12:செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு பாமகவை சேர்ந்த தேன்மொழி, அதிமுகவை சேர்ந்த தெய்வமணி, திமுகவை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் பூங்கொடி தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதனால் கூட்டணிக் கட்சிகளான அதிமுக பாமக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் திமுக உறுப்பினர்கள் பாமகவுக்கு ஆதரவளித்தனர் இதனால் பாமக வேட்பாளர் தேன்மொழி 10 வாக்குகள் பெற்று ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக தெய்வமணி 8 வாக்குகள் பெற்றார் ஒரு வாக்கு செல்லாதவையானது.