நாமக்கல், ஜன.12: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், 10 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பரமத்தி ஒன்றியத்தில் உறுப்பினர்களின் கோரம் இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை. 10 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. அங்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்றியக்குழு தலைவர்கள் விபரம்: நாமக்கல் சுமதி, பள்ளிபாளையம் தனலட்சுமி, வெண்ணந்தூர் தங்கம்மாள், எருமப்பட்டி வருதராஜ், நாமகிரிப்பேட்டை ராஜேந்திரன், கொல்லிமலை மாதேஸ்வரி. மோகனூர் சரஸ்வதி, கபிலர்மலை ரவி, புதுச்சத்திரம் சாந்தி, எலச்சிப்பாளையம் ஜெயசுதா ஆகியோர்.