பெரும்புதூர், ஜன. 10: பெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம், கோட்டூர், சேந்தமங்கலம், மாத்தூர் ஆகிய 4 ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நேர்காணல் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள மாகாண்யம், கோட்டூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு நேற்று பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடைபெற்றது.