வாடிப்பட்டி, ஜன.9: வாடிப்பட்டியில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான மகளிர் ஆக்கி போட்டியில் ஈரோடு அரசு மேல்நிலை பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. வாடிப்பட்டியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கிடையிலான 62வது குடியரசு தின விழா மாநில ஆக்கி போட்டிகள் நடந்தது. இதில் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி, தாய்மெட்ரிக் பள்ளி மற்றும் திருமங்கலம் பி.கே.என்.மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கடந்த 5ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களிலிருந்து அரசு பள்ளி மற்றும் விளையாட்டு விடுதி அணிகளும் பங்கேற்றன.