கொடைக்கானல், ஜன. 9: காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் மதுரையை சேர்ந்த வாலிபர் கொடைக்கானல் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மதுரை நாகமலை புதுக்கோட்டை சத்திய சாய் நகரை சேர்ந்த சுல்தான் மகன் நியாஸ் அலிகான் (29). இவர் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். நியாஸ் அலிகானுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் நியாஸ் அலிகான் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது.