சேலம், ஜன.9: சேலத்தில் கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளியேச் சென்று, 9 ஆண்டுகள் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், கொண்டேந்தல்பட்டியை சேர்ந்தவர் பழனிச்செல்வம் (42). இவர், கடந்த 2001ம் ஆண்டு, சிவகங்கையில் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு சேலம் வந்து நாராயண பிள்ளை தெரு பகுதியில் பதுங்கி இருந்தார். அப்போது, அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றார். ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பிடிக்க வந்த போலீசாரை வெட்டியது பற்றி பள்ளப்பட்டி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்திருந்தனர். சில ஆண்டுகளில் நீதிமன்றத்தில் பழனிச்செல்வம் ஜாமீன் பெற்றார். பின்னர், அவர் சேலம் கோர்ட்டில் நடந்து வரும் கொலை முயற்சி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 2011ம் ஆண்டு, தலைமறைவான பழனிச்செல்வத்தை கைது செய்து ஆஜர்படுத்த, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.