மன்னார்குடி, ஜன. 9:மன்னார்குடி அருகே மினி வேனில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் காயமின்றி தப்பினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (40). டிரைவர். சபரிமலைக்கு செல்வதற்கு மாலை அணிந்திருந்த இவர் நேற்று காலை மன்னார்குடி களவாய்க்கரை அருகில் உள்ள சக்திவேல் முருகன் ஆலயத்தில் இருந்து சபரி மலைக்கு செல்வதற்கு திட்டமிட்டு அதிகாலையில் அங்கு சென்று விட்டார். சபரிமலை செல்லும் ராஜசேகரை வழியனுப்ப தந்தை லோகநாதன் (60), தாயார் வசந்தா (53), மனைவி மகேஸ்வரி (35), சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான மினி வேனில் தென்பாதி கிராமத்தில் இருந்து மன்னார்குடிக்கு வந்தனர். அப்போது சேரன்குளம் கிராமம் அருகே வந்தபோது வேனின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனை தொடர்ந்து வேன் தீப்பிடித்து ஏறிய துவங்கியது.