மன்னார்குடி, ஜன.9: காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வடுவூர் அருகே வாலிபர் ஒருவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட எடகீழையூர் கிரா மத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (30). கூலித் தொழிலாளியான கோயம்புத்தூரில் வேலை செய்த போது அப்பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் எடகீழையூர் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவியிடையே நடந்த குடும்ப பிரச்னையால் சுவேதா கோபித்து கொண்டு குழந்தையை அழைத்து கொண்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். பலமுறை இளஞ்செழியன் தனது மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இளஞ்செழியன் கடந்த 6ம் தேதி அதிகாலை முதல் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.