வாலாஜாபாத், ஜன.9: வாலாஜாபாத் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு, 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தற்போது ஆங்காங்கே சிதலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில், அங்கன்வாடி மையம், ஒன்றிய துவக்கப்பள்ளி, ரேஷன்கடை உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள ரேஷக் கடை அருகில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.