குடியாத்தம், ஜன.9: குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் அரசு பள்ளி அருகே நேற்று முன்தினம் ஒரே பைக்கில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த இளைஞர்களுக்கும், இவர்களுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த குடியாத்தம் டிஎஸ்பி சரவணன், தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேசேகர்(26), காமராஜ்(25), தமிழ்ச்செல்வன்(26), தினேஷ்(25), சந்தோஷ்(19), சின்னாலாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பரத்(19), தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(17), மணி(19) மற்றும் விஜய்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.