தூத்துக்குடி, ஜன.8: தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தென்மண்டல அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 25 குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 400 சிறார்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, பூப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.