பழநி, ஜன. 8: பழநி புறநகர் பகுதியில் மர்மநபர்கள், திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழநி புறநகரான திருநகர், நேதாஜி நகர், பழநியாண்டவர் நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக மர்மநபர்கள் மற்றும் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டிற்கு ஒரு வாலிபர் இரவு 10 மணிக்கு முகத்தை கர்சீப்பால் மூடியபடி கம்ப்யூட்டர் சரிசெய்ய வந்திருப்பதாக கூறி உள்ளார். வாசலில் இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் கவனித்த வீட்டில் இருந்தவர்கள், கதவை திறக்காமலேயே பதில் கூறி உள்ளனர்.மற்றொரு புறம் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.