தேனி, ஜன.8: தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநில மத்திய செயற்குழு மற்றும் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரா.செல்வபாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கணேசன் வரவேற்றார். இதில் மாநில கவுரவத் தலைவர் செல்வம், நிறுவனத் தலைவர் கோவிந்தராசன், முன்னாள் பொதுச் செயலாளர்கள் பச்சையப்பன், ஜோதிராஜ், செல்வராஜ், மாரியப்பா ஆகியோர் கூட்டத்தை வாழ்த்தி பேசினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ப.சண்முகசுந்தரம் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியலை விரைந்து அங்கீகரிக்க வேண்டும்
எனவும், கூட்டுறவு தணிக்கைஉதவி இயக்குநர் நேரடி நியமனத்திற்காக அரசால் 8 காலிப்பணியிடங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.