காரைக்குடி, ஜன. 8: காரைக்குடி அருகே 20 வருடங்களுக்கு தான் உறுப்பினராக இருந்த அதே ஊராட்சியில் 70 வயதில் தலைவராக பொறுப்பேற்ற மூதாட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே கல்லல் யூனியன் வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவராக 70 வயது மூதாட்டி மங்கையற்கரசி என்பவர் பதவி ஏற்றுள்ளார். இவருக்கு ஒன்றிய பள்ளி ஆசிரியர் பிரிட்டோ பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு உறுப்பினர்களாக ராணி, பூபதி, வள்ளி, முத்துலட்சுமி, வேலு, இந்திராணி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். விழாவில் உடையப்பன், மணியன், பொறியாளர் நேதாஜிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.